Sunday, November 3, 2013

கீதாஞ்சலி ---XXXVII { 38 }
&
" நீ வேண்டும் ... நீயேதான் வேண்டும் ''--
இதனையே என் இதயம் ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கட்டும் .
அல்லும் பகலும் எனைத் திசை திருப்பும் அனைத்து ஆசைகளும் உட்கூடற்றதும் பொய்மையும் ஆகும் .
 
இரவு தன் இருளில் ஒளியின் வேண்டுகோளை மறைத்திருக்கிறது  ;
அதுபோலவே என் உள்ளுணர்வு இன்மையின்  ஆழத்திலும் கூட
"நீ வேண்டும் ...நீயேதான் வேண்டும் " எனும் ஓலம் வளையமிடுகிறது .
 
புயல் அமைதியின் மீதாய் தன் முழு சக்தி கொண்டு தாக்குகிறது ;
இருப்பினும் அதன் முடிவில் அமைதியையே தேடுகிறது --
அதுபோலவே எனது எழுச்சிக் கலகங்கள் உன் பாசத்தின் மீது தாக்கினாலும்
அதன் ஓலம் இன்னமும் , " நீ வேண்டும் ...நீயேதான் வேண்டும் " என்பதேயாகும்.
 
---ரபீந்தரநாத் தாகூர் .
[ தமிழ் ஆக்கம் --சந்திர கலாதர் சுந்தரம்
03.11.2013 / ஞாயிறு / ஐப்பசி 17/  மாலை 6 மணி
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
 GEITANJALI -XXXVII--38
&
that I want thee , only thee --let my heart repeat without end .
all desires that distract me , day and night , are false  and empty to the core .
 
as the night keeps hidden in its gloom the petition for light 
even thus in the depth of my unconsciousness rings the cry --
' I want thee , only thee '.
 
as the storm still seeks its end in peace when it strikes against peace
with all its might , even thus my rebellion strikes against thy love
and still its cry is --.' I want thee , only thee '
 
--RABINDRANATH TAGORE .     

Friday, November 1, 2013

இப்போது ஷேக்ஸ்பியர் 
&
என் உரையாய் :--
 
ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பற்றித்தான் பலர் அறிந்தது ...ஆனால் அவரின் கவிதைகள் மிக உன்னதமானவை ..மிக ஊன்றிப் படித்தால் ஜீவநதிபோல் இனிமை பெருக்கிடும் ..அவரது 14 வரிக் கவிதைகள்  மிக அழகானவை ;  '  சொன்னெட்  ' என்று கவிதை ஒழுங்கில் அமைக்கப் பட்டவை .
இக்கவிதை :--
ஒரு அழகிய வாலிபனை நோக்கி ஒருவர் அறிவுரை கூறுவதாய் அமைந்த ஒன்று .
அவனை திருமணம் செய்துகொண்டு அவனில் திகழும் அழகை இவ்வுலகில் தொடர்ந்து நிலை நிறுத்துமாறு ...அது அவன் தன் நிறைவால்..தன்னலத்தால் ...அவன் கருமித்தனத்தால் அவனோடு அவன் பின் அழகு மறைந்து போய்விடலாகாது ..சந்ததிகள் தொடர்ந்து உலகை மகிழ்வூட்ட வேண்டும் என்கிறார்
இளமூடனே ..உலகின் மீது கருணை கொள் என்கிறார் .
 
&  
 
விளக்க உரை :-
அழகின் அழகுகள் மக்கட்பேறு அடைந்து அவர்களின் அழகு சந்ததிகள் தொடர்ந்து பாராட்டப்பட  வேண்டும் என்று நாம் விழைகிறோம் .
அவன் மரணம் அடைந்தபின் அவனது இளவல்  அவனது  முன்னோரின் அழகின் பதிப்பாய் இருக்கும் அல்லவா ?
ஆனால் நீ...உன் அழகின்மீதே வெறியாய் , தன்னலமாய் உன் அழகின் தீக்கொழுந்துகளையே அணைக்கத் துணிந்து விடுகிறாய்
இவ்வுலகினை உன் செயலால் அழகின் பெருக்கை இழக்கச் செய்கிறாய்
நீயே உன் எதிரி ஆகிறாய்
நீ திருமணம் செய்து அழகை நிலைப்படுத்தாது உன் இனிய அழகிற்கே நீ கொடுமை புரிகிறாய்
நீ இவ்வுலகின் புத்தாபரணம் ...உலகின் வண்ணங்கள் செழுமிய வசந்த வருகையை அறிவிக்க வேண்டியவனாய் இருக்கும் நீயே ,உன் விழிகளுள் உன் அழகைப் புதைத்து கொள்வதும் ,தன்னலத்தால் அதை வீணாக்குதலும் முறையோ ?
எனவே உலகின் மீது கருணை கொண்டு திருமணம் செய்து மக்கட்பேறு அடை 
இல்லாவிடில் பேராசை கொண்டவனாய் இவ்வுலகிற்கு உரியதையும்  இடுகாட்டுடன் இணைந்து நீ தின்றுவிடு .
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@   
 
அழகு தன்மிகையாதல் வேண்டும்
&
அழகின் அழகிய படைப்புகள் அனைத்தும்
தொடர்மிகையாதலே நாம் விழைகிறோம் 
அதனால் அழகின் ரோஜா
என்றும் இறவாநிலை பெரும் அன்றோ --
கால நடையில்  ஒருவன் 
முதிர்வில்  மறைகையில் 
அவன் இளவல்  அவன் பதிப்பாய் இலங்கும் அன்றோ
ஆனால் நீயோ
உன் ஒளிர் விழிகளோடு ஒப்பந்தம் கொண்டனை -
தன்னலப் பெருக்கு ஊட்டி 
உன் ஒளிநாவினை அணைக்கிறாய்
வளம் கொழிக்கையில் பஞ்சம் படைக்கிறாய்
உனக்கு நீயே எதிரி ஆகிறாய் ;
இனிய ' தன்னையே ' மிகக்  கொடுமை செய்கிறாய்
உலகின் புத்தணியாய் நீ இதோ இருக்கிறாய் 
வண்ண வசந்தவருகை  முழக்கிட 
 நீ ஒருவனே இருக்கிறாய்
ஆனால் நீயோ உன் மொட்டினுள்ளேயே
உன் எழில்யௌவனம்  புதைக்கிறாய்  
இள மூட ! கஞ்சத்தனம் கொண்டு 
அழகு பாழ் செய்கிறாய்  
இரக்கம் காட்டுவாய்  இவ்வுலகின்மீது  -
அல்லது பேராசைக்காரனாய் உலகின் பங்கினை
இடுகாட்டுடன் இணைந்து கவர்ந்து உண்ணுவாய்  .
 
---வில்லியம் ஷேக்ஸ்பியர்
' சொன்னெட்' எனும் 14 வரிக் கவிதை ' 
 
[தமிழ் வடிவம் ---சந்திர கலாதர் ]
வெள்ளி / ஐப்பசி / நண்பகல்
 

Sonnet 1
From fairest creatures we desire increase,
That thereby beauty's rose might never die,
But as the riper should by time decease,
His tender heir might bear his memory:
But thou, contracted to thine own bright eyes,
Feed'st thy light's flame with self-substantial fuel,
Making a famine where abundance lies,
Thy self thy foe, to thy sweet self too cruel.
Thou that art now the world's fresh ornament,
And only herald to the gaudy spring,
Within thine own bud buriest thy content,
And, tender churl, mak'st waste in niggarding.
    Pity the world, or else this glutton be,
    To eat the world's due, by the grave and thee.
–William Shakespeare

--

Wednesday, October 30, 2013

[திருத்தி அமைக்கப்பட்ட வடிவம் ]
 
பொன்மலர்கள் [ ' டப்போடில்ஸ் ' ]
 
&
 
தாழ்நிலங்கள்  மலைகள் மீதாய் 
உயர் மிதக்கும் ஒரு மேகம் என
தனியனாய் நான் திரிந்தேன் ;
பட்டென ஒரு பெருவிரிப்பாய் 
எண்ணிறந்த பொன்  [டப்போடில்ஸ்] மலர்கள்  
ஏரி தொடும்  மரங்கள் கீழாய்
தென்றலில் சிலிர்த்து ஆடுதல் கண்டேன் .
 
பால்வழித் தடம்தனிலே 
இடையறாது கண்சிமிட்டும் 
ஒளிர் தாரகைகள் ஒத்தனபோல் 
ஏரி வளைவு விளிம்பெலாம்   
முடிவிலா வரிசையில் அவை
நெடிதாய் இலங்கிடக் கண்டேன்  
பத்தாயிரம் மலர்கள் ஒரே ஓரு கடைநோக்கில்
உற்சாக நடனத்தில் தலைஅலைக்கக் கண்டிட்டேன் 
 
அடுத்திருந்த அலைகளும் ஆடின
எனினும்  ஒளி தெறிக்கும் அலைகளை
அவை மகிழ்வில் வாகை சூடிடக் கண்டேன்  
இத்தகு ஆனந்தத் துணையில்  
ஒரு கவிஞன் மனம் துள்ளாது கூடுமோ ! 
மீளாத  விழியோடு திகைத்தேன்
ஆயினும் இவ்வினிமைத்  தோற்றம்
எச் செல்வம் எனக்கு ஈந்தது எனும்
எண்ணம் என்னில் சற்றும் இல்லை .
 
 
வெற்று மனத்தோ அன்றி
ஆழ் சிந்தனை அடர்ந்தோ 
அடிக்கடி என் இருக்கையில்
தலை சாய்த்து மயங்குகையில்  
உள்விழியில் அவை பளிச்சிட உணர்கின்றேன்
அதுவே தனிமைப்  பேரானந்தம் என்பேன்.
பின் மகிழ்ச்சி நிறைகின்ற என் இதயம்
அம்மலர்களோடு அழகுநடம் புரியும்
 
--வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்
--தமிழ் வடிவம் --சந்திர கலாதர்
30.10.2013 / புதன் / ஐப்பசி 13 / இரவு 11 மணி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
 
DAFFODILS
&
I wandered lonely as a cloud
That floats on high o'er vales and hills,
When all at once I saw a crowd,
A host of golden daffodils;
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze.

          
           Continuous as the stars that shine
           and twinkle on the Milky Way,
They stretched in never-ending line
along the margin of a bay:
Ten thousand saw I at a glance,
tossing their heads in sprightly dance.
The waves beside them danced; but they
Out-did the sparkling waves in glee:
A poet could not but be gay,
in such a jocund company:
I gazed—and gazed—but little thought
what wealth the show to me had brought:

For oft, when on my couch I lie
In vacant or in pensive mood,
They flash upon that inward eye
Which is the bliss of solitude;
And then my heart with pleasure fills,
And dances with the daffodils.

-- WILLIAM WORDSWORTH

Saturday, October 26, 2013

Krishna Learning To Walk
&
Hands stretched out hesitantly,
A foot on the ground unstably,
Yasoda, teaching the Lord to walk.
Sometimes watching His adorable face...
Storing away the joy in her heart,
Sometimes praising the family deity:
Give long life to her Kanhaiya.
Sometimes calling to Bal
Two to play in her courtyard.
Surdas see the Lords leela
The lustre of bliss of Nandraiya (Yasoda).

Sant Surdas

@@@@@@@@@@@@@@@@@@@@@

நடை பயிலும் கண்ணன்

&

தயங்கியே முன் நீண்ட கரங்கள்

தரை மீது தள்ளாடும் பதங்கள்

யசோதா கடவுளுக்கே நடை தருகிறாள் -

ஒரு நேரம் அழகிய அவன் முகம் பார்த்து

மனதில் தன் மகிழ்ச்சி தேக்கி --

ஒரு நேரம்இல்லத் தெய்வம் போற்றி .

அவள் கண்ணனுக்கு நெடு வாழ்வு கேட்டு

ஒரு நேரம் பலராமன் அழைத்து

இருவரும் முற்றத்தில் சேர்ந்தாடப் பணித்து !



சூர்தாஸ் கிருஷ்ணனின் லீலை கண்டும்

யசோதைதனின் ஆனந்த ஒளி பார்த்தும்

----சூர்தாஸ்
[ ஆங்கிலம் வழி தமிழ் வடிவம் --
சந்திர கலாதர் ]
See more


மீரா தன தோழியிடம் ...
*****************************
ஆட்கொள்ளப்பட்டேன் கிருஷ்ணனின் காதலிலே !
அவனை ஈர்த்திடத்தான் எனை அழகு செய்தேன் .
தோழி , பார் , இப்போது என் விழிகள்
அவனில் மட்டும் திளைக்கின்றன ;...
பறந்திடும் பாதங்களில் அவன் எனை நாடி வந்தான்!

பிரியே , திருமணத் தளை எல்லாம்
கணவன் உயிர் உள்ள வரையே -
எனவே முடிவு இல்லா கிருஷ்ணனையே
எனக்கெனவே உறுதி கொண்டேன்--
எனவே மணந்தபின் என்றும் அவன் எனக்கே !

ஒ கிரிதரா , முன்பிறவிகளில்
நாம் இருவர் ஒருவர் என்றிருந்தோம்
என் கண்ணா , காத்திருக்கேன் உனக்காக ,
ஒ ..என்று வந்து எனை அடைவாய் ?

---சந்திர கலாதர்
25.10.2013 / வெள்ளி / ஐப்பசி 8 / காலை 9.30 மணி

ஆங்கில மொழி மாற்றம் வழி தமிழ் செதுக்கம் --
சந்திர கலாதர் .

@@@@@@@@@@@@@@@@@@@@

lagana hamaaree syaama sum laagee

nainaa nirakha suka paaya |

saajaam simgaara suhaanaam sajani ,

preetama milyaam dhaaya

baranaa baryaam baapuro

janamyaa janama nasaaya |

baryaam saajana saamvaro ree ,

mhaaro churalo amara hojaaya |

janama janama ro kanhado ,

mhaari preeta bujhaaya|

meeraa rae prabhu hari abinaasee ,

kaba rae milasyo aaya ||


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


what meeraa said to her companion

&

possessed by krishnaa's love

I adorned myself to entice him ,

for now my eyes delight in him alone , my friend ;

and he came to meet me on swift feet .


friend , the marriage bond lasts only as long

as one's husband lives ;

therefore I have pledged myself to krishnaa

and wed him who 'll ever be mine ,

the lord deathless .


in previous lives , o giridhara ,

you and I were one ,

I am waiting , lover ,

o when will you come ?


--meeraa

நீ எப்பெயரும் கொண்டவன் ஆகுக

எவ்வடிவும் பெற்றுப் பொலிக

எத்தனை நெடும் கதைகள் மீது அமர்ந்தும் ஒளிர்க
...
எப்படி உணரப்படினும் அப்படியே ஆகுக

ஆணோ பெண்ணோ தாயோ தந்தையோ

எதுவேயாயினும் நிலை பெருக ;

உனக்கு வாகனமாய் கொடியாய் துணையாய்

எதுவேனும் கொள்க .


ஆனால் என் நெஞ்சால் , உதடுகளால்

உச்சரிக்கப்படுகையில் மட்டும்

கடவுள் என்றோ , தெய்வம் என்றோ

இறைவனே என்று மட்டுமே

அன்போடு அழைக்கப்படுவது ஆகுக

உனை ஒன்றி மனம் குவிக்கையில்

என் நெஞ்சே உன் வாகனம் ஆகுக .


இறைவா !

என் நெஞ்சில் எழுகின்ற கோரிக்கைகள்

என் துன்பங்கள் மட்டுமே சாராத வரம் அருள்க !


வல்லோனே ! நல்லோனே !

எளியோரை வருத்தும் வலியோர்

நல்லாரை நசுக்கும் நய வஞ்சகர்

பெண் சூறையாடும் அற்பர்

அதற்குத் துணைபோகும் பெண் பேயர்

அனைவரும் நில்லாக் கடும் அரிப்பெடுத்து

இரத்தமாய்ச் சிவந்து அலறி ஓடி

எப்பிறவியும் இப்பாபம் செய்யோம் செய்யோம்

என்று கதறி அழ அவர் உயிர் பறிப்பாய் ;

காலம் கனியட்டும் தீயவை குவியட்டும்

மெதுவாய் அவதாரம் எடுப்போம் எனும்

ஒத்திப் போடும் பழங் கதைகள் இனி வேண்டாம்

பொல்லாத சோம்பற்தனம் உனக்கு வேண்டாம்.


விழி புயலாய்.... வா பிரளயமாய் !


---சந்திர கலாதர்
மீரா ஆழ்ந்த காதல் கண்ணன்பால் கொண்டவள் ...எளிய சிந்தனையாய் எளிய மொழிகளில் ஆர்ப்பாட்டமில்லாது அலங்காரமில்லாது பேசுகிறாள் ...இதில் பெரிய கவித்துவம் இல்லை ..ஆனால் ஓர் பெண்ணின் ஆழ்ந்த காதல் பூர்ணி மைப் பால் நிலவாய் வழிந்தோடுகிறது

&

தோழி , என் விழிகள் என் அன்பன் கிருஷ்ணனுக்காகவே .
ஒவ்வொரு நொடியும் அவன் வருவான் என்று நம்பியே
நாளும் பொழுதும் ஏங்கித் தவிக்கிறேன்

குயில் கூவுகையில் இதயத்தை
ஓர் அம்பு குடைந்து குடைந்து துளைப்பதாய்த் தவிக்கிறேன்

பெரியோர் சிலர் இகழ்கின்றனர்
சிலர் கடிந்து கொள்கின்றனர்
பிறர் என்னை வெறுக்கின்றனர்
ஆனால் நான் கிருஷ்ணனுக்கு விலையானேன்
அவன் அடிமை நான்

தொடர் பிறப்புகள் அனைத்தும் என் காதலை
அவனிடம் ஈடு கொடுத்துவிட்டேன்
எப்போதும் அவனுடன் நான் இணைந்திருப்பேன்

---மீரா
[ ஆங்கிலம் வழி தமிழ் வடிவம் --
சந்திர கலாதர் ]
25.10.2013 / வெள்ளி / ஐப்பசி 8 / இரவு 10.30 மணி

*************************************************
I only have eyes , friend , for krishnaa , my loved one ,
day after day I pine way , believing each moment ,he'll come .

when the cuckoo coos it's as though a dart
had pierced my heart through and through .

my elders deride me , some of them chide me others revile me ;
but I am sold to krishnaa , I 'm his slave .

I have pledged my love to him life after life
and I am united with him always .
--meeraa


Sunday, September 29, 2013

அது ஒரு காலம் ,அன்பே
**************************
அது ஒரு காலம் , அன்பே !
நீ , பூ நகைகள் அணிந்து ,
இதேமரத்தடியில்
நாம் அமர்ந்திருப்போம் ; ....
அந்த நாட்களை மறந்தனையோ ?
அருகே ஓடும் இந்த ஆறு
தன் அலைபோல் நெளிந்திடும்
உன் பின்னல் அழகை
இன்னமும் மறக்கவில்லை ; .
அதன் மணற்கரையில் உன் பாதச் சுவடுகள்
இன்னமும் தேடி அடையக் கூடுவன --.

இவை அனைத்தும் வெற்றுக் கனவு என நீ
மறந்தனையோ ?

நாளும் பொழுதும் தனித்து அமர்ந்து
இனிய பாடல்கள் நீ தொடுத்தது
நினைவில் இன்னமும் பிரியாது இழைகின்றதே;
அவற்றின் எதிரொலிகள் இன்னமும் பசும் புற்களிடை
ஒரு ஆனந்தச் சிலிர்ப்பு அனுப்புகிறதே !
நிழலில் அமர்ந்து மாலை தொடுப்பதற்காக
மலர்கள் சேகரிப்பாயே
அங்கு , பங்குனி , உன் முந்தானை தீண்டலில் மகிழ்ந்திருக்குமே --
அது இன்னமும் உன் பொருட்டு ' சண்பக ' மலர்கள் தேடுகிறது

இவை அனைத்தும் வெற்றுக் கனவு என
நீ மறந்தனையோ ?

---ரபீந்தரநாத் தாகூர்
[ தமிழ் வடிவம் --சந்திர கலாதர் ][ ஆங்கில மொழிமாற்றம் வழி ]
[ 29.09.2013 / ஞாயிறு / புரட்டாசி 13 / பகல் 11 மணி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

there was a time , love ,
when you used to sit under this very tree
bedecked in your flower-ornaments .
have you forgotten those days ?
the river that flows by , as of old
has not forgotten your braid of hair
sinuous as her own waves are ,
and your footprints can still be traced
on her sandbanks .

are these all an empty dream
which you have forgotten ?

the melodies you strung together
day after day , as you sat alone
linger there still ,
and their echoes still send
a shiver of delight among the blades of grass .
'phalgun ' , happy for the touch of your sari's end
where you gather flowers to weave into a garland ,
as you sat in the shade,
still goes on looking for ' champa ' flowers for you .

are these all an empty dream
which you have forgotten ?

---Rabindranath tagore
[ ekadaa tumi priyey , 1917 in Bengali ]
[ translated bykshitis roy ]
See more

Saturday, September 28, 2013

என் உரையாய் 
***********************
இந்தக் கவிதையில் ஒரு சோகம் இழைகிறது ;
இது முதுமையில் அல்லது வாழ்வில் மரணத்தின்
அழைப்பு தொலை தூரத்தில் மெலிதாக ஆனால் உறுதியாகக் கேட்பவர்களுக்கே நன்கு புரியும் .
எனக்குத் தெளிவாக அவ்வோசை செவி வீழ்கிறது .
இளமைக்கு அது புரியாது .
இலையுதிர் காலங்கள் தப்பாது அதை  கண் காட்சி ஆக்கும் .
 
--சந்திர கலாதர்  
 
@@@@@@@@@@@
 
மந்தமான இலையுதிர் நாள் மெதுவாகத் தேய்கிறது
இடை வெளியில் பழுப்பு இலை மெதுவாகச் சுழல்கிறது
ஒளி எத்தனை தெள்ளத் தெளிவாய் !
காற்று வியத்தகு தூய்மையாமாய் !
ஆனால் , கண்படாத்  தேய்வு நலிவுகளில் இருந்து  உயிர் தப்ப  இயலவில்லை.
 
நாளும் அது சற்றுக் கூடுதல் முதுமை பெறுகிறது
ஆண்டாண்டு இப்பழுத்த இலை சுழல்கிறது.
கடந்த காலங்களில் என்றும் இலையுதிர் பருவம் 
இத்தனை சோகித்திருந்தது இல்லை என்று
நினைவு எடுத்துச் சொல்கிறது 
அல்லது வெறுமனே கற்பனை கொள்கிறது   
--அலெக்சாந்தர் ப்ளோக்
[ தமிழ் வடிவம் ---சந்திர கலாதர் ]
சனி / புரட்டாசி / மாலை மணி  
 
@@@@@@@@@@@@@
 
slowly the tardy autumn day is waning,
slowly the yellow leaf spins in mid-air ,
the light's so crystal clear ,
the air is so wondrous pure
but soul cannot escape the unseen wear and tear .
 
and every day it grows a little older ,
and every year the yellow leaf spins by ,
and memory recalls , or just imagines ,
that autumn never was so sad in years gone by .
 
--alexander blok
[ Russian poet 1880-1921]  
 
 

Wednesday, September 25, 2013

தோட்டக்காரன்  --[ 46 ]
******************************
&
எனை நீங்கி உன் வழி சென்றாய் .
உனக்காகத் துயர் மூழ்க எண்ணினேன்
உன் தனித்த உருவம் பொன்னில் வடித்து இதயம் பதிக்கச் சிந்தித்தேன் .
ஆனால் , ஆ , என் பொல்லா நேரம் , காலம் குறுகியது . .
 
இளமை ஆண்டாண்டு தேய்கிறது ;
வசந்த நாட்கள் பறக்கின்றன ;
மெல்லிய மலர்கள் காரணமின்றி மடிகின்றன ;
அறிஞர்கள் வாழ்க்கை தாமரை இதழ்ப் பனிமுத்து என்று எச்சரிக்கின்றனர் .
எனக்குத்  தன் புறம் திருப்பிய ஒருத்தியை உற்று நோக்குதற்கு  இவற்றை எல்லாம் நான் புறம் தள்ளுதல் தகுமோ  ?
அது மூடத்தனமும் முரட்டுத்தனமுமானது. ;
ஏனெனில் காலம்  குறுகியது.
 
ஆதலின் , எனது மழை இரவுகளே , சடசடக்கும் பாதங்களோடு  வாருங்கள் ;
பொன் உதிர் காலங்களே , மென்னகை புரியுங்கள் ;
கவலையிலா  ஏப்ரலே ,வெளியெங்கும் உன் முத்தம் சிதறி வா !
நீ வா , ஆம் நீ.. ..நீயும் கூடத்தான் !
என் நேசங்களே , நாம்  அற்பமானுடர் என்பது அறிவீர்கள் ;
தன் இதயம் பறித்துச் செல்லும் ஒருத்திக்காக ஒருவன் தன்னிதயம் சிதைத்துக்  கொள்ளல் அறிவுடைமை ஆகுமோ ? 
ஏனெனில் காலம் குறுகியது
  .
ஒரு மூலை அமர்ந்து சிந்தித்து , என் அனைத்துலகும் நீ தான் என்று சந்தங்களில் சந்திப்பது  இனிமையானதே .
ஆறுதல் விடுத்து சோகம் தழுவுதலே வீரம் சார்ந்தது ;
ஆனால் ஒரு புதிய முகம் என் வாயில் எட்டிப் பார்க்கிறது ;
அதன் விழி உயர்த்தி என் விழி சந்திக்கிறது .
என் கண்ணீரை துடைத்துக் கொள்ளத்தான் கூடும் ;
என் பாடலின் ராகம் மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்     
 ஏனெனில் காலம் குறுகியது .
 
---ரபீந்தரநாத் தாகூர் 
[ தமிழ் வடிவம் ---சந்திர கலாதர் ]
25.09.2013 / புதன் / புரட்டாசி 9 . 
 @@@@@@@@@@@@@@@@@@
 
THE GARDENER---[ 46 ] 
&
you left me and went on your way .
I thought I should mourn for you and set your solitary image in my heart wrought in a golden image .
but ah , my evil fortune , time is short .
 
youth wanes year after year ;
the spring days are fugitive ;
the frail flowers ie for nothing ,
and the wise man warns me that life is but a dewdrop on the lotus leaf .
 
should I neglect all this to gaze after one who has turned her back on me ?
that would be rude and foolish , for time is short .
 
then , come , my rainy nights with pattering feet ; 
smile , my golden autumn ; 
come , careless april , scattering your kisses abroad .
you come , and you , and you also !
my loves , you know we are mortals . 
is it wise to break one's heart for the one who takes her heart away? 
for me time is short .
 
it is sweet to sit in a corner to muse and write in rhymes that you are all my world .
it is heroic to hug one's sorrow and determine not to be consoled .
but a fresh face peeps across my door and raises its eyes to my eyes .
I cannot but wipe away my tears and change the tune of my song .
for time is short. 
 
--RABINDRANATH TAGORE
 
 

Thursday, September 19, 2013

படகுத் துறை ...[ 76 ]
@@@@@@@@@@@


உன்  முகத்தைப் பார்த்ததாக உணர்ந்தவுடன்
இருளில் படகினைச் செலுத்தினேன் .

இதோ , காலை சிறுநகையில் புலர்கின்றது ;
வசந்த மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன !

ஒளி மறையினும் மலர்கள் வாடினும்
என் பயணம் தொடர்வேன் .

சொல் இழந்த அசைவுகள் நீ காட்டியபோது
இவ்வுலகம் தூங்கியது ;
இருள் , மேனி  திறந்து கிடந்தது .

இதோ , மணி நாதம் ஓங்கி ஒலிக்கின்றது ;
தங்கச் சுமை படகு ஏறி இருக்கின்றது !

மணியோசை அடங்கினும்
படகு வெறுமை போயினும்
என் பயணம் முன்னேகும் .

சில படகுகள் அகன்று விட்டன ;
சிலவோ ஆயத்தமாகவில்லை ;
எனினும் சற்றும் தாமதியேன் .

பாய்கள் புடைத்து விம்முகின்றன ;
மறுகரையிலிருந்து பறவைகள் திரும்பிவிட்டன .

பாய்கள் தொய்வுறினும்
கரையின் சேதி தொலைந்திடினும்
முன் பயணிப்பேன் .

---ரபீந்தரநாத் தாகூர் .
[ தமிழ் வடிவம் --சந்திர கலாதர் ]
20.09.2013 /வெள்ளி / புரட்டாசி 4

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

CROSSING --[ 76 ]

&

I felt I saw your face , and I launched my boat in the dark .

now the morning breaks in smiles and the spring flowers are in bloom .

yet should the light fail and the flowers fade I will sail onward.

when you made mute signal to me the world slumbered and the darkness was bare .

now the bells ring and the boat is laden with gold .

yet should the bells become silent and my boat be empty I will sail onward .

some boats have gone away and some are not ready , but I will not tarry behind .

the sails have filled , the birds come from the other shore .

yet , if the sails droop , if the message of the shore be lost , I will sail onward .

----RABINDRANATH TAGORE .