Monday, February 3, 2014

கீதாஞ்சலி --[ 9 ]
&
ஏ மூடனே ,உன் தோள் மீதே
உனைச் சுமக்க முயல்கிறாயே !...
ஓ பிச்சைக்காரனே ,
உன் வீட்டின் முன்னேயே
பிச்சைக்கு நிற்கிறாயே !

அனைத்தும் தாங்கவல்லான் கரங்களில்
உன் சுமைகள் அனைத்தையும் விட்டு அகல் .
பின் ஒருபோதும் வருந்தித் திரும்பாதே.

உன் ஆசை தன் மூச்சின் தொடுகையிலேயே
விளக்கின் சுடரை அணைத்துவிடுகிறது .
அது புனிதம் அற்றது --
உனது பரிசுகளைத் தூய்மையற்ற
அக்கரங்களில் எடுத்துவிடாதே .
புனித அன்பினில் வழங்கப்படுவதை மட்டுமே
பெற்றுக்கொள்வாய் .

---ரபீந்த்ரநாத் தாகூர் .

[ தமிழ்ச் சிற்பம் -- சுந்தரம் சந்திரகலாதர் ]
தை 2 1 / திங்கள் / 03.02.2014

@@@@@@@@@@@@@@@@@@@@

GITANJALI -IX [ 9 ]
&
O FOOL , to try to carry thyself upon thy own shoulders !
o beggar , to come to beg at thy own door !

leave all thy burdens on his hands
who can bear all ,
and never look behind in regret .

thy desire at once puts out the light of the lamp
it touches with its breath .
it is unholy --
take not thy gifts through its unclean hands .
accept only what is offered by sacred love.

---RABINDRANATH TAGORE .

Sunday, February 2, 2014

gitanjali [4 ] tamil translation

கீதாஞ்சலி --[ 4 ]
&
என் வாழ்வின் வாழ்வே !
என் அனைத்து உறுப்புகள் மீதும்
உனது உயிர்ப்பான தொடுதல் தெரிந்து 
என் மேனியைத் தூய்மையாய் வைத்திட
எப்பொழுதும் முயல்வேன் .
என் மனதின் பகுத்தறிவின் ஒளிதூண்டும்
உண்மையாய்  நீ இருப்பது அறிந்து
என் எண்ணங்களிலிருந்து உண்மையிலாதன 
அகற்றிட எப்பொழுதும் முயல்வேன் .
என் இதயத்தின் மையக் கருவறையில் 
உன் இருக்கை இலங்குவது உணர்ந்து 
என் இதயம் இருந்து தீயவை அனைத்தும் 
எப்பொழுதும் துரத்திட முயல்வேன் ;
என் அன்பிலும் மலர்வேன் .
ரபீந்த்ரநாத் தாகூர் .
[ தமிழ் முகம் ---சந்திர கலாதர் ]
ஞாயிறு / தை / 02.02.2014
@@@@@@@@@@@@@@@@@@
GITANJALI -IV  [ 4 ]
&
LIFE  of my life , i shall ever try to keep my body pure ,
knowing that thy living touch is upon all my limbs .
i shall ever try to keep all untruths out from my thoughts ,
knowing that thou art that truth which has kindled
the light of reason in my mind .
i shall ever try to drive all evils away from my heart 
and keep my love in flower ,
knowing that thou hast thy seat 
in the inmost shrine of my heart .
and it shall be my endeavour
to reveal thee in my actions ,
knowing it is thy power 
gives me strength to act .
----RABINDRANATH TAGORE .

Tuesday, January 28, 2014

கீதாஞ்சலி --[ 2 ]
&
' பாடு ' என்று நீ எனைப் பணிக்கையில்
பெருமிதத்தில் என் இதயம்
உடைந்துகொள்ளுமோ  எனத் தோன்றுகிறது .
உன் முகம் பார்க்கிறேன் ;
விழிகளில் நீர் நிறைகின்றது .
 
என் வாழ்வின் அனைத்துக் கடுமைகளும்  முரண்பாடுகளும்
ஒரு இனிய லய இசைவுள் இளகுகின்றன --
கடல் ஊடாய்ப்  பறந்திடும் ஒரு ஆனந்தப் பறவை போல்
என் போற்றுதல்கள் சிறகு விரிக்கின்றன .
 
என் பாடுதலில் நீ மகிழ்வு அடைகிறாய்  என்று அறிகிறேன்
நான் பாடகன் என்பதாக மட்டுமே   
உன் முன்னிலை வருகிறேன் என்பதும் நான் அறிகிறேன்.
 
உன் பாதங்களை  அடைதற்கு 
ஒருபோதும் வேட்கை கொள்ள தகுதியற்ற  நான்
என் பாடலின் விரிந்து பரந்த இறக்கை விளிம்புகளால்
அவற்றைத் தொடுகிறேன் .
 
பாடும் மகிழ்வில் மதி கிறங்கி 
எனையே மறந்து
என் தலைவ , உன்னைத்  
' தோழனே ' என்று அழைக்கிறேன்
 
---ரபீந்த்ரநாத்  தாகூர் .
 
[தமிழ் முயற்சி ---சந்திர கலாதர் ]
2 9 /௦ 1 /2 ௦ 1 4 /புதன் /தை 16
@@@@@@@@@@@@@@@@@@
 
.
GITANJALI --II [ 2 ]
&
WHEN  thou commandest me to sing , it seems , that my heart would break with pride ;
and I look to thy face ,and tears come to my eyes .
 
all that is harsh and dissonant in my life melts
into one sweet harmony --
and my adoration spreads wings
like a glad bird on its flight across the sea .
 
I know thou takest pleasure in my singing .
I know that only as a singer
I come before thy presence .
 
I touch by the edge of the far-spreading wing of my song
thy feet which I could never aspire to reach .
 
drunk with the joy of singing I forget myself
and call thee friend who art my lord .
 
---RABINDRANATH  TAGORE

 
 
--- 

Monday, January 27, 2014

translation of THE GARDENER [ 61] OF RABINDRANATH TAGORE

தோட்டக்காரர்   [ 61 ]
&
அமைதி கொள் , என் இதயமே ,
பிரியும் வேளை இனிதாய் இருக்கட்டும் .
 
அது ஒரு மரணம் என்றாக வேண்டாம்
ஆனால் முழுமையானதாகட்டும் .
 
காதல் நினைவுள்ளும்
வலி பாடல்களுள்ளும் உருகட்டும் .
 
வானில் பறத்தல் ஆனது
கூட்டில் இறக்கைகள் மூடலில் முடியட்டும் .
 
உனது கரங்களின் இறுதித் தொடுதல்
இரவு மலரினைப்போல் மென்மையாகட்டும் .
 
ஓ..அழகிய முடிவே,
ஓர் நொடி சலனமற்று நில் ;
பின் மௌனத்தில்
உனது கடைசி மொழிகள் சொல்.
 
உனக்குத் தலை வணங்குகிறேன் ;
உன் பாதைக்கு ஒளி ஊட்ட
என் விளக்கினை உயர்த்திப் பிடிக்கிறேன் .
 
---ரபீந்த்ரநாத் தாகூர் .
 
[ தமிழ்த் தேரில் ---சந்திர கலாதர் ]
செவ்வாய் / தை 1 5  /   நண்பகல்
28.01.2014
@@@@@@@@@@@@@@@
 
THE GARDENER [ 61]
&
PEACE ,my heart , let the time for the parting be sweet .
 
let it not be a death but completeness.
 
let love melt into memory and pain into songs .
 
let the flight through the sky end in the folding of the wings
over the nest .
 
let the last touch of your hands be gentle like the flower of the night .
 
stand still . o beautiful end , for a moment,
and say your last words  in silence .
 
I bow to you and hold up my lamp to light you on your way .
 
---RABINDRANATH TAGORE .

Sunday, November 3, 2013

கீதாஞ்சலி ---XXXVII { 38 }
&
" நீ வேண்டும் ... நீயேதான் வேண்டும் ''--
இதனையே என் இதயம் ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கட்டும் .
அல்லும் பகலும் எனைத் திசை திருப்பும் அனைத்து ஆசைகளும் உட்கூடற்றதும் பொய்மையும் ஆகும் .
 
இரவு தன் இருளில் ஒளியின் வேண்டுகோளை மறைத்திருக்கிறது  ;
அதுபோலவே என் உள்ளுணர்வு இன்மையின்  ஆழத்திலும் கூட
"நீ வேண்டும் ...நீயேதான் வேண்டும் " எனும் ஓலம் வளையமிடுகிறது .
 
புயல் அமைதியின் மீதாய் தன் முழு சக்தி கொண்டு தாக்குகிறது ;
இருப்பினும் அதன் முடிவில் அமைதியையே தேடுகிறது --
அதுபோலவே எனது எழுச்சிக் கலகங்கள் உன் பாசத்தின் மீது தாக்கினாலும்
அதன் ஓலம் இன்னமும் , " நீ வேண்டும் ...நீயேதான் வேண்டும் " என்பதேயாகும்.
 
---ரபீந்தரநாத் தாகூர் .
[ தமிழ் ஆக்கம் --சந்திர கலாதர் சுந்தரம்
03.11.2013 / ஞாயிறு / ஐப்பசி 17/  மாலை 6 மணி
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
 GEITANJALI -XXXVII--38
&
that I want thee , only thee --let my heart repeat without end .
all desires that distract me , day and night , are false  and empty to the core .
 
as the night keeps hidden in its gloom the petition for light 
even thus in the depth of my unconsciousness rings the cry --
' I want thee , only thee '.
 
as the storm still seeks its end in peace when it strikes against peace
with all its might , even thus my rebellion strikes against thy love
and still its cry is --.' I want thee , only thee '
 
--RABINDRANATH TAGORE .     

Friday, November 1, 2013

இப்போது ஷேக்ஸ்பியர் 
&
என் உரையாய் :--
 
ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பற்றித்தான் பலர் அறிந்தது ...ஆனால் அவரின் கவிதைகள் மிக உன்னதமானவை ..மிக ஊன்றிப் படித்தால் ஜீவநதிபோல் இனிமை பெருக்கிடும் ..அவரது 14 வரிக் கவிதைகள்  மிக அழகானவை ;  '  சொன்னெட்  ' என்று கவிதை ஒழுங்கில் அமைக்கப் பட்டவை .
இக்கவிதை :--
ஒரு அழகிய வாலிபனை நோக்கி ஒருவர் அறிவுரை கூறுவதாய் அமைந்த ஒன்று .
அவனை திருமணம் செய்துகொண்டு அவனில் திகழும் அழகை இவ்வுலகில் தொடர்ந்து நிலை நிறுத்துமாறு ...அது அவன் தன் நிறைவால்..தன்னலத்தால் ...அவன் கருமித்தனத்தால் அவனோடு அவன் பின் அழகு மறைந்து போய்விடலாகாது ..சந்ததிகள் தொடர்ந்து உலகை மகிழ்வூட்ட வேண்டும் என்கிறார்
இளமூடனே ..உலகின் மீது கருணை கொள் என்கிறார் .
 
&  
 
விளக்க உரை :-
அழகின் அழகுகள் மக்கட்பேறு அடைந்து அவர்களின் அழகு சந்ததிகள் தொடர்ந்து பாராட்டப்பட  வேண்டும் என்று நாம் விழைகிறோம் .
அவன் மரணம் அடைந்தபின் அவனது இளவல்  அவனது  முன்னோரின் அழகின் பதிப்பாய் இருக்கும் அல்லவா ?
ஆனால் நீ...உன் அழகின்மீதே வெறியாய் , தன்னலமாய் உன் அழகின் தீக்கொழுந்துகளையே அணைக்கத் துணிந்து விடுகிறாய்
இவ்வுலகினை உன் செயலால் அழகின் பெருக்கை இழக்கச் செய்கிறாய்
நீயே உன் எதிரி ஆகிறாய்
நீ திருமணம் செய்து அழகை நிலைப்படுத்தாது உன் இனிய அழகிற்கே நீ கொடுமை புரிகிறாய்
நீ இவ்வுலகின் புத்தாபரணம் ...உலகின் வண்ணங்கள் செழுமிய வசந்த வருகையை அறிவிக்க வேண்டியவனாய் இருக்கும் நீயே ,உன் விழிகளுள் உன் அழகைப் புதைத்து கொள்வதும் ,தன்னலத்தால் அதை வீணாக்குதலும் முறையோ ?
எனவே உலகின் மீது கருணை கொண்டு திருமணம் செய்து மக்கட்பேறு அடை 
இல்லாவிடில் பேராசை கொண்டவனாய் இவ்வுலகிற்கு உரியதையும்  இடுகாட்டுடன் இணைந்து நீ தின்றுவிடு .
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@   
 
அழகு தன்மிகையாதல் வேண்டும்
&
அழகின் அழகிய படைப்புகள் அனைத்தும்
தொடர்மிகையாதலே நாம் விழைகிறோம் 
அதனால் அழகின் ரோஜா
என்றும் இறவாநிலை பெரும் அன்றோ --
கால நடையில்  ஒருவன் 
முதிர்வில்  மறைகையில் 
அவன் இளவல்  அவன் பதிப்பாய் இலங்கும் அன்றோ
ஆனால் நீயோ
உன் ஒளிர் விழிகளோடு ஒப்பந்தம் கொண்டனை -
தன்னலப் பெருக்கு ஊட்டி 
உன் ஒளிநாவினை அணைக்கிறாய்
வளம் கொழிக்கையில் பஞ்சம் படைக்கிறாய்
உனக்கு நீயே எதிரி ஆகிறாய் ;
இனிய ' தன்னையே ' மிகக்  கொடுமை செய்கிறாய்
உலகின் புத்தணியாய் நீ இதோ இருக்கிறாய் 
வண்ண வசந்தவருகை  முழக்கிட 
 நீ ஒருவனே இருக்கிறாய்
ஆனால் நீயோ உன் மொட்டினுள்ளேயே
உன் எழில்யௌவனம்  புதைக்கிறாய்  
இள மூட ! கஞ்சத்தனம் கொண்டு 
அழகு பாழ் செய்கிறாய்  
இரக்கம் காட்டுவாய்  இவ்வுலகின்மீது  -
அல்லது பேராசைக்காரனாய் உலகின் பங்கினை
இடுகாட்டுடன் இணைந்து கவர்ந்து உண்ணுவாய்  .
 
---வில்லியம் ஷேக்ஸ்பியர்
' சொன்னெட்' எனும் 14 வரிக் கவிதை ' 
 
[தமிழ் வடிவம் ---சந்திர கலாதர் ]
வெள்ளி / ஐப்பசி / நண்பகல்
 

Sonnet 1
From fairest creatures we desire increase,
That thereby beauty's rose might never die,
But as the riper should by time decease,
His tender heir might bear his memory:
But thou, contracted to thine own bright eyes,
Feed'st thy light's flame with self-substantial fuel,
Making a famine where abundance lies,
Thy self thy foe, to thy sweet self too cruel.
Thou that art now the world's fresh ornament,
And only herald to the gaudy spring,
Within thine own bud buriest thy content,
And, tender churl, mak'st waste in niggarding.
    Pity the world, or else this glutton be,
    To eat the world's due, by the grave and thee.
–William Shakespeare

--

Wednesday, October 30, 2013

[திருத்தி அமைக்கப்பட்ட வடிவம் ]
 
பொன்மலர்கள் [ ' டப்போடில்ஸ் ' ]
 
&
 
தாழ்நிலங்கள்  மலைகள் மீதாய் 
உயர் மிதக்கும் ஒரு மேகம் என
தனியனாய் நான் திரிந்தேன் ;
பட்டென ஒரு பெருவிரிப்பாய் 
எண்ணிறந்த பொன்  [டப்போடில்ஸ்] மலர்கள்  
ஏரி தொடும்  மரங்கள் கீழாய்
தென்றலில் சிலிர்த்து ஆடுதல் கண்டேன் .
 
பால்வழித் தடம்தனிலே 
இடையறாது கண்சிமிட்டும் 
ஒளிர் தாரகைகள் ஒத்தனபோல் 
ஏரி வளைவு விளிம்பெலாம்   
முடிவிலா வரிசையில் அவை
நெடிதாய் இலங்கிடக் கண்டேன்  
பத்தாயிரம் மலர்கள் ஒரே ஓரு கடைநோக்கில்
உற்சாக நடனத்தில் தலைஅலைக்கக் கண்டிட்டேன் 
 
அடுத்திருந்த அலைகளும் ஆடின
எனினும்  ஒளி தெறிக்கும் அலைகளை
அவை மகிழ்வில் வாகை சூடிடக் கண்டேன்  
இத்தகு ஆனந்தத் துணையில்  
ஒரு கவிஞன் மனம் துள்ளாது கூடுமோ ! 
மீளாத  விழியோடு திகைத்தேன்
ஆயினும் இவ்வினிமைத்  தோற்றம்
எச் செல்வம் எனக்கு ஈந்தது எனும்
எண்ணம் என்னில் சற்றும் இல்லை .
 
 
வெற்று மனத்தோ அன்றி
ஆழ் சிந்தனை அடர்ந்தோ 
அடிக்கடி என் இருக்கையில்
தலை சாய்த்து மயங்குகையில்  
உள்விழியில் அவை பளிச்சிட உணர்கின்றேன்
அதுவே தனிமைப்  பேரானந்தம் என்பேன்.
பின் மகிழ்ச்சி நிறைகின்ற என் இதயம்
அம்மலர்களோடு அழகுநடம் புரியும்
 
--வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்
--தமிழ் வடிவம் --சந்திர கலாதர்
30.10.2013 / புதன் / ஐப்பசி 13 / இரவு 11 மணி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
 
DAFFODILS
&
I wandered lonely as a cloud
That floats on high o'er vales and hills,
When all at once I saw a crowd,
A host of golden daffodils;
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze.

          
           Continuous as the stars that shine
           and twinkle on the Milky Way,
They stretched in never-ending line
along the margin of a bay:
Ten thousand saw I at a glance,
tossing their heads in sprightly dance.
The waves beside them danced; but they
Out-did the sparkling waves in glee:
A poet could not but be gay,
in such a jocund company:
I gazed—and gazed—but little thought
what wealth the show to me had brought:

For oft, when on my couch I lie
In vacant or in pensive mood,
They flash upon that inward eye
Which is the bliss of solitude;
And then my heart with pleasure fills,
And dances with the daffodils.

-- WILLIAM WORDSWORTH